காங்கேசன்துறை – நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.
பின்னர் அன்றைய தினம் மீண்டும் பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்கை ஆரம்பிக்கும் பயணிகள் போக்குவரத்து கப்பல் நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது.
இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க் கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
