திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

யாழில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம் – விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் மக்கள் கேள்வி!

Last updated: பிப்ரவரி 16, 2025 04:03
Share
SHARE

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் விடுவிக்கப்படாத வலிகாமம் வடக்கு காணிகள் தொடர்பாகக் காணி உரிமையாளர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பியதால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உடுவில் தொகுதி மககள் சந்திப்பு ஏழாலை ஏழு கோவிலடியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று மாலை மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் உரையாற்றினார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணமலாக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாகப் பிரதமர் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் காணி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் உரையாற்றி விட்டு மேடையிலிருந்து இறங்கி மக்களைச் சந்திக்க வந்தபோது, காணி உரிமையாளரொருவர் பலாலி பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பது தொடர்பாக தமது ஆதங்கத்தைப் பிரதமரிடம் நேரடியாகத் தெரிவித்தார்.

பிரதமர் ஏனையவர்களுடன் பேசச் சென்றபோது காணி உரிமையாளர் உங்கள் அரசியலுக்காக எங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு அறிவிப்பு
தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானியும் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சந்திப்பு!
சர்ச்சையில் சிக்கிய சிறிலங்காவின் சபாநாயகர் பதவி விலகல் !
தமிழர்களின் படுகொலைக்கு டக்ளசும் உடந்தை – அம்பலப்படுத்திய சிறீதரன் !

பிரதமரைச் சூழ்ந்திருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த காணி உரிமையாளரை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தபோது அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டகாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அரசாங்கத்தின் முதலாவது பாதீடு நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
Next Article இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.