திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது !

Last updated: நவம்பர் 18, 2024 12:02
Share
3 Min Read
SHARE

சிறி லங்காவின் புதிய முதன்மை அமைச்சர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை இன்று (18.11.2024) அரச தலைவர் அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டது. அண்மையில் நடைபெற்று முடிவடைந்த அரச தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பாண்மை இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் இன்று அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொறுப்பேற்றுக் கொண்டது.

புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் பின்வருமாறு,

அரச தலைவர் அநுரகுமார திசாநாயக்கபாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியகல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
விஜித ஹேரத்வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்
பேராசிரியர் சந்தன அபேரத்னபொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
சட்டத்தரணி ஹர்சன நாணயக்காரநீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
சரோஜா சாவித்ரி போல்ராஜ்மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
கே.டி லால் காந்தவிவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
அநுர கருணாதிலகநகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர்
ராமலிங்கம் சந்திரசேகர்கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
பேராசிரியர் உபாலி பன்னிலகேகிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
சுனில் ஹந்துன்னெத்திகைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்
ஆனந்த விஜேபாலபொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
பிமல் ரத்னாயக்கபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர்
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவிபுத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸசுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
சமந்த வித்யாரத்னபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
சுனில் குமார கமகேஇளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
வசந்த சமரசிங்கவர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
பேராசிரியர் கிரிசாந்த அபேசேனவிஞ்ஞான,தொழில்நுட்ப அமைச்சர்
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோதொழில் அமைச்சர்
பொறியியலாளர் குமார ஜயகொடிவலுசக்தி அமைச்சர்
டொக்டர் தம்மிக பட்டபெந்திசுற்றாடல் அமைச்சர்

பதவியேற்றுக் கொண்ட சிறிலங்காவின் புதிய அமைச்சரவையில் பின்வரும் விடயங்கள் கவனம் பெறுகின்றன.

  1. தனியே அமைச்சரவை அமைச்சரவை அமைச்சர்கள் மட்டுமே இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
  2. இரண்டு தமிழர்களிற்கு புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ள போதும், தமிழ் இசுலாமியர்கள் எவருக்கும் இடம் வழங்கப்படவில்லை.
  3. வடக்கு – கிழக்கைச் சேர்ந்த மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இன்றி அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  4. தமிழர்கள் இருவர் பதவியேற்றுக் கொண்ட தமிழர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகர் தேசியப் பட்டியல் ஊடகவே பாராளுமன்றத்திற்குள் நுழைகின்றமை குறிப்பிடத்தக்கது.
  5. மற்றொரு தமிழரான சரோஜா சாவித்தி போல்ராஜ் மலையத் தமிழராகக் கருதப்படுகின்ற போதிலும் பெரும்பாண்மையாக மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்தல்லாமல் மாத்தறை மாவட்டத்திலிருந்து சிங்கள மக்களின் விருப்பு வாக்குளினால் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தனது பதவிப்பிரமானத்தை சிங்களத்திலேயே மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article 2024ஆம் ஆண்டிலும் ஏறுமுகத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம்
Next Article டெங்கு நோயாளர் எண்ணிக்கை 800 ஆல் அதிகரிப்பு
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.