திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
காலநிலை மாற்றம்சூழலியல்

2024ஆம் ஆண்டிலும் ஏறுமுகத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம்

Last updated: நவம்பர் 16, 2024 07:21
Share
2 Min Read
SHARE

வரலாற்றில் பதிவானதிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக 2024 அமையும் என உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ள நிலையில் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் (CO2) உமிழ்வு 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 0.8% அதிகரித்திருப்பதாக Global Carbon Project எனும் அறிவியலாளர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 °Cக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ள நிலையில் நடப்பாண்டின் உலகளாவிய CO2 உமிழ்வு 41 பில்லியன் டன்னாக இருக்கும் எனவும் இது கடந்த ஆண்டில் 40.6 பில்லியன் டன்னாக இருந்தது என இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

பன்னாட்டளவில் 120 அறிவியலாலர்களின் பங்களிப்புடன் வெளியான இந்த ஆய்வறிக்கை பல எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது. ”காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் வியக்கும் வகையில் மாறி வருகின்றன, இருப்பினும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு உச்சத்தை எட்டியதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் இன்னும் காணவில்லை” என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய எக்ஸிடெரின் குளோபல் சிஸ்டம்ஸ் இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் பியர் ஃப்ரீட்லிங்ஸ்டீன் கூறினார். (புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் உச்சநிலை எட்டப்படவில்லை என்பதற்கான அர்த்தம் இன்னும் அவற்றின் உமிழ்வு அதிகரிக்கும் என்பதும் இதனால் புவி மேலும் வெப்பமடையும் என்பதாகும்).

உலகளவில் புதைபடிவ கார்பன் டை ஆக்சைடின்  உமிழ்வில் சீனாவின் பங்கு 32% ஆகவும், அமெரிக்காவின் பங்கு 13% ஆகவும், இந்தியாவின் பங்கு 8% ஆகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்கு 7% ஆகவும் இருப்பதாக இவ்வறிக்கைக் குறிப்பிடுகிறது. இதில் சீனாவின் பங்கு 0.2% அதிகரிக்கவும், அமெரிக்காவின் பங்கு 0.6% குறையவும், இந்தியாவின் பங்கு 4.6% அதிகரிக்கவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்கு 3.8% குறையவும் வாய்ப்பிருப்பதாக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இதே நிலையில் உமிழ்வு தொடர்ந்தால் இன்னும் 6 ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 °C அளவுக்கு உயர 50% வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவைப் பொருத்தமட்டில் ஒட்டுமொத்த உமிழ்வில் நிலக்கரியின் பங்கு 4.5%, எண்ணெய் பயன்பாடின் பங்கு 3.6%, இயற்கை எரிவாயுவின் பங்கு 11.8%, சிமெண்ட் உற்பத்தியின் பங்கு 4.0% அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக இவ்வறிக்கை கணித்துள்ளது.

எல் நினோ எனும் காலநிலை நிகழ்வின் விளைவால் 2023 ஆம் ஆண்டில் நிலத்தில் உள்ள சுற்றுச்சூழல் அமைவுகளால் கார்பன் உறிஞ்சப்படுவது குறைந்தது. இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எல் நினோ முடிவடையும் போது மீண்டும் சரியாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

வேகமெடுக்கும் காடழிப்பு; 2022ல் இவ்வளவா?
ஆபிரிக்கப் நத்தைகளால் பேராபத்து விளையும் – பொ.ஐங்கரநேசன்
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலின் தாக்கம்; திணறும் வளரும் நாடுகள்

CO2 உமிழ்வு 2014-2023 காலத்தில் 22 நாடுகளில் குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் இந்நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்திருப்பதாக இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

விரிவான அறிக்கைக்கு: https://globalcarbonbudget.org/fossil-fuel-co2-emissions-increase-again-in-2024/

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Climate ChangeEnvironmentFeatured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மிகவும் வெப்பமான ஆண்டு 2024; பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குகளை உலகம் எட்டுமா?
Next Article சிறிலங்காவின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது !
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.