செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

அம்பாறையில் 62.5 வீதம் வாக்குப்பதிவு

Last updated: நவம்பர் 14, 2024 14:57
Share
1 Min Read
SHARE

10ஆவது பாராளுமன்ற தேர்தல் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.

 மேலும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்கு பெட்டிகள் தற்போது அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றன.

இங்கு கொண்டுவரப்படும் அனைத்து வாக்குப் பெட்டிகளும் முறையாக வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்க தகுதி  பெற்றிருந்தனர்.

சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528  வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் 7.30 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.இதற்கென மொத்தமாக 68 வாக்கெண்ணும் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

You Might Also Like

தகுதியுடைய ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் 6,000 ரூபா அஸ்வெசும கொடுப்பனவு!
சுமார் 15 ஊழல், மோசடி சம்பவங்கள் குறித்து விசாரணை
வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக தொடரூந்து சேவை
திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99,727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 18,4653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்திருந்தது. மேலும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 07 ஆகும். மொத்தமாக 64 அரசியல் கட்சி உட்பட சுயேட்சைக்குழுக்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் வன்முறையற்றறும் அமைதியானதுமான தேர்தல் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றது. பெரியளவிலான வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை. எனினும் சிறு சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பு ஊடாக கிடைக்கப்பெற்றிருந்தன 

 மேலும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பெபரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. மேலும் வாக்களிப்பு நிலையமான அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மதியம் 2 மணி வரையிலான வாக்களிப்பு வீதம்
Next Article மட்டக்களப்பில் 63.44 வீதமான வாக்களிப்பு – 357 முறைப்பாடுகள்
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.