திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு அழிப்பு; மணிவண்ணன் காட்டம்

Last updated: நவம்பர் 2, 2024 15:06
Share
2 Min Read
SHARE

தமிழ் தேசியம் என்று பேசுவார்கள், விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்கவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (01) சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றவர்களை இரண்டு வகையாக பிரித்துக்கொள்ள முடியும். தமிழ்த் தேசிய அரசியலை நாங்கள் முன்னெடுக்கப்போகின்றோம், எங்களுடைய மாவீரர்களின் கனவுகளை நாங்கள் சுமந்து செல்ல போகின்றோம், அந்த விடுதலையை வென்றெடுக்க போகின்றோம் என ஒரு தரப்பு நாடாளுமன்றம் சென்றது.

15 ஆண்டுகளாக நாங்கள் தமிழ்த் தேசியம் வேண்டும் என்று நாங்கள் வாக்களித்துக் கொண்டிருந்தோம். ஆனால் எதனை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று சாதித்தார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும்.

2001ஆம் ஆண்டு எங்களுடைய தலைவரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அது இன்று அது இந்த தேர்தல் பரப்பிலேயே இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இதுவா தமிழ் தேசியத்தை வென்றெடுக்கின்ற தரப்புகளின் சாதனை.

You Might Also Like

தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் – சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி!
நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பிரதமர் ,எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் நாடாளுமன்றில் கருத்து!
வலிந்து காணமால் ஆக்கபட்டவர்களின் உறவுகள் போராட்டம் !
வடக்கில் 14 சபைகளைக் கைப்பற்றுவோம் – கஜேந்திரகுமார்

எங்களுடைய தேசிய காட்சிகள் எனக் கூறியவர்கள் இன்று எங்களைப் பிரித்து, அழித்து நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியம் பேசி சமஷ்டியை பெற முடியவில்லை. ஆகக் குறைந்தது மாகாண சபையின் காலம் முடிந்த பின்னர் அதனை நடததுவதற்கு கூட இந்த அரசியல் தலைவர்களிடம் வக்கில்லாமல் காணப்பட்டது.

தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியம் எனக்கூறி எதையுமே சாதிக்காமல் மீண்டும் ஒரு தடவை எங்களுக்கு ஆணை தாருங்கள் என உங்கள் முன் வந்திருக்கின்றார்கள். நாங்கள் இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் அவர்களுக்கு ஆணை கொடுத்தால் தமது கட்சி பிரச்சினையை நீதிமன்றத்தில் வழக்காடி தீர்த்துக் கொள்ள முயல்வார்களே தவிர, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்யப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை
Next Article நாளை வாக்காளர் அட்டை விநியோக நாளாக பிரகடனம்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.