திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

இந்தியாவின் ரோ மற்றும் `RSS அமைப்பை கனடாவில் தடை செய்ய வேண்டும்

Last updated: அக்டோபர் 17, 2024 10:08
Share
2 Min Read
SHARE

கனடாவின் குடியுரிமை பெற்ற `சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். `இந்தக் கொலையில், இந்திய உளவுத்துறைக்கு தொடர்பிருப்பதாக நம்பத் தகுந்த ஆதாரம் இருக்கிறது’ எனக் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். அப்போது தொடங்கி இந்திய – கனட நாடுகளுக்கு மத்தியிலான உறவு சிக்கல், இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில், இரண்டு நாடுகளும் விசா வழங்க மறுத்தது தொடங்கி, சமீபத்தில் தங்கள் நாட்டிலிருந்த தூதர்களை மாறி மாறி திரும்பி அனுப்பியது வரை உறவு சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில், இந்தியச் சிறையிலுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கேங் உடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள், கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக கனடா குற்றம்சாட்டியது. இது தொடர்பாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவரும், முன்னாள் கனட எம்.பி-யுமான ஜக்மீத் சிங் செய்தியாளர்களை சந்தித்த போது, “கனடா மண்ணில் கனடியர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை ஆதரிக்கலாம் என இந்திய அரசு எண்ணியதே அடிப்படை தவறு. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்தியாவிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்ததால், தூதரக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியா, திசை திருப்பும் அறிக்கைகளை வெளியிடுவதை விட்டுவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளோ, `ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, எதிர்வரும் தேர்தலில் தோல்வியடையும் நிலையில் இருக்கிறது. எனவேதான், கனடாவில் ஆதிக்கம் செலுத்தும் சீக்கியர்களை தனது வாக்கு வங்கியாக மாற்றிக்கொள்ள இப்படி அரசியல் நாடகமாடுகிறார். ஆனால், 2025 தேர்தலில் நிச்சயம் அவர் தோல்வியடைவார். பின்னர், இந்தியா – கனடா உறவு மீண்டும் மேம்படத் தொடங்கும்’ எனக் கூறிவருகிறார்கள்.

கனட அரசியலில் தலையிடும் இந்திய தூதர்கள் மீது கடுமையான தடைகளை கொண்டு வர வேண்டும். இந்தியாவை தளமாக கொண்டு, கனடாவிலும் பிற நாடுகளிலும் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஐ வெளியேற்ற வேண்டும். கனேடியர்களை கொல்வதற்கு இந்திய தூதர்கள் கிரிமினல் குழுக்களை பணியமர்த்துவதாக ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) கூறியுள்ளது. நாம் அனைவரும் கனேடியத் தலைவர்களாக ஒன்றிணைந்து, மோடியைக் கண்டிக்க வேண்டும். கனேடியர்களின் பாதுகாப்பை முதன்மையாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தமிழ்த் தேசியப் போலிகளையும் போதை வியாபாரிகளையும் நிராகரிப்போம் – ஐங்கரநேசன்
Next Article காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் – உரிமை கோரிய இசுரேல்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.